நம்மில் பல பேருக்கு எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம். தேங்காய் பூ சாப்பிட்டாலே எப்போதும் இளமையாக இருக்கலாம் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. இளநீரை விட அதிக சத்துக்கள் தேங்காய் பூவில் இருக்கிறது.
தேங்காய்குள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறும். அந்த வகையில் தேங்காய் பூ சாப்பிடுவதனால் செரிமான அமைப்பை சீராக்கி இரைப்பை அலர்ஜி ஆகியவற்றை குணப்படுத்தப்படுகிறது. தேங்காய் பூவில் இருக்கும் ஜெலட்டினாஸ் என்னும் அமிலம் நமது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
தேங்காய் பூவில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பூ உடலில் இருக்கும் செல்களை புதுப்பித்து நமக்கு எப்போதும் இளமையான தோற்றத்தை தருகிறது.




