குழந்தைகளுக்கு அதிகமான தொற்றுகள் மற்றும் நோய்கள் புது புது பெயர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் மல்லபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சிகிச்சைக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று ஜூலை 21ஆம் தேதி மருந்து வரவுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்து வழங்கப்படும். இங்கு அறுபது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீபா கண்டறியப்பட்ட இந்த 14 வயது சிறுவனின் உடல்நிலை எந்த மாற்றமும் இல்லை. கடந்த பத்தாம் தேதி முதல் இந்த சிறுவனுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.




