Oplus_131072
தினம் ஒரு குட்டிக்கதை:-
தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.
“மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் கூப்பிடு … எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்” என்றார்.
அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள்.
“தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!”.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.
வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.
திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.
“வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?” என்று…
அதற்கு மகள் சொன்னாள்.,
“தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்து தீயை அணைப்பதற்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். ”
நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,
உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?
ஒரு பழத்திற்குள் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை சொல்லி விடலாம்.ஒவ்வொரு விதைக்குள்ளும் எத்தனைப் பழங்கள் இருக்கிறது என்பதை சொல்ல முடியாது…
எதிர்காலத்தை நினைத்துக் கலங்காமல், நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழப் பழகுங்கள்..
கடுமையான பாதை என்று எதுவுமில்லை… பாதையை மாற்றாதே… பாதை குறித்த உன் பார்வையை மாற்று…
வழியில் இருப்பது “தடை” அல்ல… நன்றாக உற்றுப் பார் அது “விடை”…
எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருக்கலாம்… நெருக்கமில்லாத தூரத்தில் இருக்கும் வரை…
தள்ளி விடுவது யாராகவும் இருக்கட்டும். தட்டிக் கொடுப்பது நீயாக இரு…
நினைவு வரும் போது தேடும் உறவைத் தள்ளி வை… நினைவே நீ என்கின்ற உறவை அருகில் வை…!




