
காடை குழம்பு சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை அப்படி இருக்க சுவையான விதத்தில் காடை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்..
காடை குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் காடை நாலு, பெரிய வெங்காயம் ரெண்டு, கரம் மசாலாத்தூள் ஒன்றரை டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி, புதினா ஒரு கைப்பிடி, கருவேப்பிலை இரண்டு கொத்து, பச்சை மிளகாய் ரெண்டு, தயிர் ஒரு கப், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், தேங்காய் பால் 1/2 கப், கசகசா ஒரு ஸ்பூன், எண்ணெய் தேவைக்கேற்ப, உப்பு தேவைக்கு ஏற்ப மிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், பெரிய வெங்காயத்தை தோள் உரித்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் காடையை சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப உப்பு கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், காடை நன்கு கூறியதும் எடுத்து ஒரு முறை கழுவி கொள்ளவும் தேங்காயுடன் கசகசா சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், அதனுடன் சுத்தம் செய்து ஊற வைத்திருக்கும் காடையை போட்டு இரண்டு நிமிடங்கள் பிரட்டி விடவும் காடையுடன் கரம் மசாலா, வெங்காயம், தக்காளி எல்லாம் ஒன்றாக சேரும்படி பிரட்டி விடவும், இரண்டு நிமிடங்கள் கழித்து காலை சற்று நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை பிரட்டவும் பிறகு மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறவும் பின்னர் அரைத்த தேங்காய் கசகசா விழுது போட்டு கிளறவும் அனைத்தும் சேர்ந்து கிரேவி படத்தில் திற்காக வந்ததும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கிளறி வானலியை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும் 15 நிமிடங்கள் கழித்து நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடும் சுவையான காடை குழம்பு தயார்..!!