
ஆதிகாலங்களில் எல்லாம் சைக்கிளை மிகப்பெரிய வாகனமாகவும் அதனை வைத்து இருப்பவர்கள் மிகப்பெரிய பணக்காரர்களாகவும் பார்க்கப்பட்டு வந்தது, அப்படி இருக்கும் பட்சத்தில் காலம் மாற மாற புது புது வாகனங்கள் உருவாகி இன்று சைக்கிள் என்பது நினைவுக்கு மட்டுமே வருகிறது..
இன்றைய தலைமுறையினர் சைக்கிள் என்றாலே தெரிவதில்லை இன்னும் சொல்லப்போனால் சைக்கிள் போல் வடிவமைத்து அதில் பேட்டரி அமைத்து உட்கார்ந்துபடியே ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ஓட்டப்படுகிறது, ஆனால் எந்த காலமாக இருந்தாலும் சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியமும் உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும், காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி ஜாக்கிங், ரன்னிங் விட சைக்கிளிங் செய்வது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம், சைக்கிளிங் செய்வதால் உடல் புத்துணர்ச்சி நரம்புகளுக்கு தேவையான பயிற்சி, மற்றும் இதயத்துடிப்பை சீராக வைப்பதோடு உடலையே ஆரோக்கியத்தை வைக்கிறது இந்த சைக்கிளிங் பயிற்சி..!!