ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் ராஜஸ்தான் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் சண்டிகரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் 205க்கு 4 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், ஜெய்ஸ்வால் என்னும் வீரர் 67 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் பஞ்சாப் அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் பெர்குசன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
பஞ்சாபின் வதேரா என்னும் வீரர் 62 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கவில்லை. இறுதியில் பஞ்சாப் ஆள் வெறும் 155 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை வென்ற ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது வெற்றியை இந்த வருடம் பதிவு செய்தது.




