பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!! வேடிக்கை பார்த்த மக்கள்..!! போலீசார் விசாரணை..!!
தகாத உறவு காரணமாக வழக்கறிஞர் ஒருவரை பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவரை ஆனந்த் என்ற நபர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வழக்கறிஞர் கொல்லப்படும்போது சுற்றி பலர் இருந்தபோதும் ஒருவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இந்த படுகொலை தகாத உறவு பிரச்சினை காரணமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




