
*கேரளாவில்* *ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல*,
மூன்று சென்டுல ஒரு வீடு…
*இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு…*
அந்த வீட்ல
*ஒரு வயதான தம்பதிகள்*. *அவங்கள தேடி*
*யாரும் வந்த மாதிரி தெரியல.*
பசங்க எல்லாம் *வெளிநாட்டில இருப்பாங்க போல.*
நாங்க புதுசா கல்யாணம் ஆன
*இளம் ஜோடி*.
இனிமே தான் குழந்தை…
வார நாட்களில்
எங்க ரெண்டு பேருக்கும்
வேலைக்கு போய்ட்டு வரவே
சரியா இருக்கும்…
*எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி*…
*காபி குடித்து விட்டு ஒரு மணி நேரம் பேசிய பின்பு தான் வீடுதிரும்புவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்…*
*அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்…*
ஒவ்வொரு *ஞாயிற்றுக் கிழமையும்* அவங்க வீட்டுக்கு போகும் போது,
*காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க…*
தாத்தாவும் மீசையை *ஸ்டைலா முறுக்கி விட்டுக் கிட்டு ஒரு வெற்றிச் சிரிப்புடன் திறந்து கொடுப்பார்…*
*பாட்டி ஒரு நமட்டுச் சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க…*
இத ரெண்டு மூணு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப *பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு கருவி device வாங்கி கொடுத்தோம்…*
இந்த வாரமும் வழக்கம் போல்
*எங்கள் ஞாயிறு மாலை visit.*
வழக்கம் போல்
*காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி.* *தாத்தாவும் இறுமாப்புடன்*
*திறந்து கொடுக்க,*
பாட்டி உள்ளே சென்றார்…
பாட்டி உள்ளே செல்ல,
என் மனைவியும் பின் சென்று..
*”பாட்டி, ஏன் அந்த கருவியை device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல. மறந்துட்டீங்களானு”*
கேட்க …
*பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்…*
“குழந்தே,
*இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை*.
*நானே திறந்திருவேன்*.
*அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம்.* சந்தோசம்…
*இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து.* இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு *உபயோகமா இருக்கோம்* என்ற
*ஒரு மகிழ்ச்சி*. நான் இன்னும்
*அவரை சார்ந்து இருக்கேன்னு*
அவருக்கு ஒரு *ஆளுமை…*
*திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே*.
இன்னும் *வாழப்போறது*
கொஞ்சநாள் தான்.
*யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழணும். அதுக்குத் தான் இந்த நாடகம்”னு* சொன்னாங்க…
கொஞ்ச நேரம்
என்னால ஒன்னும் பேச முடியல.
*இந்த மூடியில இவ்வளவு விஷயமா…*
வயசானவங்களை under estimate பண்ணக்கூடாது.
*அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க…*
இந்த பாடம் எல்லாம்
*எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க…*
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்துத் தான் கத்துக்கணும்.
*அதுக்கு அவங்க*
*நம்மளோட இருக்கணும்*.
தாத்தா,பாட்டியோடு *வாழ்வது வரம்* என்றால் பேரன்,பேத்தியோடு
*வாழ்வது கொடுப்பினை…*
பணத்துக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை
பாசத்துக்கு கொடுங்கள்…