நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொரு பூஜை மற்றும் ஒவ்வொரு பரிகாரம் என இந்த பிரச்சனை இருந்தால் இந்த பூஜை செய்யுங்கள் இந்த பரிகாரம் செய்யுங்கள் என ஜோதிடர்கள் கூறி நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே நம் அனைவரும் கேட்கப்பட்ட ஒன்றுதான். இந்த வகையில் நம் வீட்டின் சமையல் அறையில் உள்ள ஏலக்காயை வைத்து ஒரு பரிகாரம் செய்தால் நம் வீட்டில் செல்வம் செழித்து பணக்கஷ்டம் வராமல் இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏலக்காய் என்பது ஒரு நறுமண பொருள். அதுமட்டுமின்றி மகாலட்சுமி தெய்வத்திற்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள் இந்த ஏலக்காயாகும். மகாலட்சுமி தெய்வம் எங்கெங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த ஏலக்காயை வைத்தால் பேர அதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து, வருமானம் அதிகரிக்க, செல்வம் பெருகுவதற்கும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி சிலை அல்லது படத்திற்கு ஏலக்காய் மாலை சூட்டி ஏலக்காய் தீர்த்தம் வைத்து வழிபட வேண்டும். மேலும், ஒன்பது ஏலக்காய்களை ஒரு நூலில் கோர்த்து உங்களுடைய வலது கையில் கட்டிக் கொண்டால் உங்களிடமிருந்து எதிர்மறையான சக்திகள் விலகி அதிர்ஷ்டம் வரும் என்பது ஐதீகம். மேலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் இருவருமே பணம் சேருவதற்கும் பணம் விரயம் ஆகாமல் இருப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தும் பரிசில் சிறிது ஏலக்காயை இடித்து ஒரு பேப்பரில் மடித்து பரிசில் வைத்தால் பணம் சேருமாம் தேவையில்லாத செலவுகள் குறையும் என்று கூறப்படுகிறது. ஏலக்காய் என்பது அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு பொருளாகும். எனவே இதை எல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் வந்து செல்வம் செழிக்கும்.




