இந்த நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் அதிகமாக உட்கொள்கிறோம் இதனால் உடலில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டாலும் தினமும் நாம் சந்திக்கும் ஒன்று இந்த மலச்சிக்கல். இருப்பினும், நாம் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் விரும்பி உட்கொள்கிறோம். இதனை நாம் உட்கொள்வதால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மலச்சிக்கல் பிரச்சினையால் தினமும் பாதிக்கப்படுகிறார்கள். நவீன காலகட்டத்தில் இந்த மலச்சிக்கல் பிரச்சினைக்கு பல ஆங்கில மருந்துகள் வந்துள்ளன இருப்பினும் இந்த மருந்துகளை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் வீட்டிலேயே இயற்கையான முறையில் இதற்கு ஒரு வைத்தியம் உள்ளது. இதை எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
மலச்சிக்கலை சரி செய்யும் கசாயம் செய்ய தேவையான பொருட்கள்:
கரிய போளம் – 3கிராம்,
பனை வெல்லம் – 5கிராம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கரிய போலம், பனைவெல்லம் இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் கரிய போலமானது, கற்றாளையிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை பொருளாகும். இது கிருமி நாசினியாக செயல்படுகிறது. மேலும் ரத்தக்கட்டு, கேன்சர் செல்களை தடுப்பது, மலச்சிக்கல், மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு போன்றவற்றை ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கிறது.




