
- பன்னீர் மரத்தின் வளர்ப்பு முறைகள் :
* பன்னீர் மரமானது விதை, வேர்க்குச்சி, நாற்று போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
* மரங்களை வளர்க்க, மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
* 35-வது நாள் இலைகள் வந்துவிடும். 75-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.
* விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இலை முடிச்சு நோய்கள் பன்னீர் மரத்தை தாக்குகின்றன.
* இதனால் இலைகள் சுருண்டு விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது.
* இலை முடிச்சு நோயை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.