பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆப்பிள் நிறுவனம்..!!

பயனர்களுக்கு எச்சரிக்கை… ஆப்பிள் நிறுவனம் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனது நிறுவனத்தின் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆப்பிள் கடிகாரம் , ஆப்பிள் தொலைபேசி , ஐபாட் மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சி ஆகிய தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையைத் தவிர்க்க, அந்தந்த தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக புதுப்பிக்க(update) செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அவர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Previous

அக்கா நீ என் ஆளு..!! ஐஸ்வர்யா லக்ஷ்மியிடம் காதலை பொழியும் ரசிகர்கள்..!!

Read Next

அருமையான சுவையில் கொங்குநாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular