சுல்தான்பூரில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான்பூரில் மாப்பிள்ளை 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ள நிலையில் மணமகள் திடீரெனெ திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளார் என கூறப்படுகிறது. எனவே திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் என உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் திருமணம் ஏற்பாடு செய்தபோதே இந்த விஷயம் தெரியும் அல்லவா திடீரெனெ திருமணத்தை நிறுத்த காரணம் என்ன எனவும், இதெல்லாம் ஒரு காரணமா என்று ஒரு தரப்பு உறவினர்கள் அந்த மணமகள் மீது புகார் கூறுகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




