பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு..!!

 

📷மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..

📷இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு…

📷இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு..

📷சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்…

📷அவள் கர்ப்பம் சுமைக்கையில்

நீ அவளைச் சுமந்திடு…

📷விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..

📷உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே…

📷தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்…

📷தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்…

📷வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..

📷சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்….

📷எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..

📷நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு…

📷நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு….

📷உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..

📷வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்..

📷வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்..

📷அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை…அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை…

📷அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி..

📷தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு…

📷சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு…

படித்ததி்ல் பிடித்தது.

Read Previous

செந்தில் பாலாஜி வழக்கு நவம்பர் 15ஆம் தேதி ஒத்திவைப்பு..!!

Read Next

விஜயின் அறிவிப்பு பிற கட்சிகளை இழிவுபடுத்தக்கூடியது கே.பாலகிருஷ்ணன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular