
முதலில் அரை கப் பச்சரிசி மாவு மற்றும் கால் கப் பாசிப் பருப்பை நன்கு கழுவி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்பு பெரிய குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூடு பேஸ்ட் போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளியையும் சேர்த்து வதங்கவிட வேண்டும். அதன்பின்பு உப்பு, மிளகு தூள், குருமா மசாலா போன்றவற்றை சேர்த்து கிளறி, அதில் கழுவிய அரிசி, பருப்பை சேர்த்து 4 கப் தண்ணீரை ஊற்றி, மூடியை போட்டு 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். (இந்த நேரத்தில் இறைச்சியை கலந்து சாப்பிட விரும்பினால் அதையும் கலந்து கூடுதலாக 5 நிமிடம் வேக வைக்கலாம்.) பின்னர் 3 விசில் வந்தவுடன், தேங்காய் பால்,கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி தயார்.