சென்னையில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, சென்னை முழுவதும் பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கனரக வாகனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இருக்க வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது என்றும் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.




