எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாசிப்பருப்பு சுழியம் செய்வது பற்றி காண்போம், செட்டிநாடு ஸ்டைலில் பாசிப்பருப்பு சுழியம் செய்து சுவைத்து பார்த்தால் அதன் சுவை தனி வகை அவற்றை செய்வதற்கு இந்த பொருட்களை பயன்படுத்தவும்..
பாசிப்பருப்பு உளுந்து மற்றும் ஜவ்வரிசி ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும், பிறகு நீரை வடித்து வடை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்க வேண்டும், அத்துடன் கெட்டியான பதத்தில் பனைவெல்லம் பாகு போல் செய்து ஏலக்காய் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக பூரண உருண்டைகளை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் ஊறவைத்து அரைத்து எடுத்த மாவினை உருண்டையாக பிடித்து அதனுடன் பூரணத்தை சேர்த்து இதனை மாவில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு சுழியம் ரெடி, மேலும் இதனை சுவைத்து பார்த்தால் பாசிப்பருப்பு சுழியம் செட்டிநாடு ஸ்டைலில் சுவை மிகுந்து திங்கதிங்க வாய் தித்திப்பாகும், நீங்களும் செய்து பாருங்கள்..!!




