பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் மோதல்.. இரண்டு பேர் சுட்டுக்கொகொலை..

காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் எனும் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருந்தனர்.   இதையறிந்த சிலர் பாதுகாப்பு படையினருக்கு ரகசியமாக தகவல் அளித்துள்ளனர்.

இந்த ரகசிய தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் , காஷ்மீர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து  நேற்று இரவு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை அறிந்த பதுங்கிய பயங்கரவாதிகள் திடீரென இரு தரப்பினர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினர்.  அவர்களை சுற்றி வளைத்த போலீசாரும் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு  நடத்தினர். இருதரப்பினருக்குமிடையே நடந்த மோதல் இன்று காலை வரை நீடித்தது.  இந்த நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

Read Previous

படகு கவிழ்ந்து 76 பேர் விபத்தில் உயிரிழப்பு..

Read Next

நடிகை குஷ்புவிற்கு கோல்டன் விசா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular