பாம்புகள் உலகின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். பெரும்பாலும், அவற்றைப் பார்த்தாலே நமக்கு பதட்டமும் பயமும் ஏற்படும். ஆனால் அத்தகைய பாம்புகளை விரட்டும் தன்மை சில பொருள்களில் உள்ளன.
பாம்புகள் சில பொருட்களின் வாசனையை விரும்புவதில்லை. அவற்றின் வாசனைக்கு பாம்புகள் அவை இருக்கும் இடத்திற்கு வர விரும்புவதில்லை. அந்த வாசனைக்கு பாம்புகள் அங்கிருந்து ஓடிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாம்புகளை விரட்டும் தன்மை கொண்ட பொருள்களை குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்.
பூண்டு மற்றும் வெங்காயத்தின் கடுமையான வாசனையை பாம்புகள் விரும்புவதில்லை. அவற்றை நசுக்கி பாம்புகள் நுழைய வாய்ப்புள்ள இடங்களில் வைக்கலாம், அல்லது தண்ணீரில் கலந்து சுவர்கள் மற்றும் கதவுகளுக்கு அருகிலும் தெளிக்கலாம்.
பாம்புகளால் புதினா மற்றும் துளசியின் வாசனையைத் தாங்க முடியாது. இவற்றை வீட்டினுள்ளோ அல்லது தோட்டத்திலோ நடுவது பாம்புகளை துரத்துவதோடு மட்டுமில்லாமல், சுற்றியுள்ள சூழலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
பாம்புகள் புகைக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. வீட்டைச் சுற்றி பாம்புகள் இருப்பதாக சந்தேகித்தால், சில உலர்ந்த இலைகள் அல்லது ஊதுபத்திகளை எரிப்பது அவற்றை விரட்ட உதவும்.
சம அளவு எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் சில துளிகள் இலவங்கப்பட்டை எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, இந்தக் கலவையை வீடு முழுவதும் தெளிக்கவும். இதன் வாசனை பாம்புகளை விரட்டுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




