
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே எலித்திப்பற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சூப்பிரண்டு அதிகாரியாய் பணியாற்றி வருபவர் கே எம் சஜீவ்(வயது 50).
இவர் கடந்த ஒன்றாம் தேதி மருத்துவமனைக்கு 17 வயதுடைய சிறுமி ஒருவர் ஆலோசனைக்காக பாலியல் பலாத்கார வழக்கில் வந்து உள்ளார். அப்போது கவுன்சிலிங் வந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று கவுன்சிலிங் தருவதாக கூறி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இந்த சம்பவம் காவல் துறையினருக்கு தெரிய வர சாலக்குடி நீதிமன்றத்தில் குற்றவாளி மருத்துவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உள்ளது.பாலியல் பலாத்கார வழக்கில் கவுன்சிலிங் வந்த சிறுமிக்கு மீண்டும் பாலியர் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.