பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் இருக்கும் 21 தீவிரவாத இடங்களை தாக்கியது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதற்கு இந்த பெயர் வருவதற்கு காரணம் காஷ்மீர் தாக்குதலில் தீவிரவாதிகள் மனைவிகளுக்கு முன்பாக தனது கணவர்களை கொன்று குவித்ததால் அவர்களுக்கு நியாயம் கேட்கும் வகையில் இந்த பெயரை சூட்டியுள்ளது இந்தியா.

இதனால் அன்று பாதிப்படைந்த மனைவிமார்கள் அனைவரும் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பார்த்து நன்றி கூறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் மனதை நெகிழ்ச்சி அடைய வைக்கும் விஷயம் நடந்த வண்ணம் இருக்கிறது. இந்த சம்பவம் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக மே ஏழாம் தேதி மற்றும் எட்டாம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு சில தாய்மார்கள் சித்தூர் என்னும் பெயரை சூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பீகாரில் குந்தன் குமார் என்னும் நபர் தனது மகளுக்கு சிந்தூர் எனும் பெயரை சூட்டி தனது தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு கொண்டாடி வரும் நிலையில் பலர் இந்த செயலை செய்வது பாராட்டுக்குள்ளாகியது.

Read Previous

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உலகில் உள்ள எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள் இவைதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular