விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்தார். துர்கா தேவி என்ற அந்த மாணவி தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகே வந்த அரசுப் பேருந்து மோதியதில் மாணவி படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




