
காய்கறி வகைகளில் கொடிகளில் காய்க்கக்கூடிய நீளமான தோற்றம் உடையது இந்த புடலங்காய். இந்த புடலங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம்.
புடலங்காயில் கலோரிகள் குறைவாகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் தினமும் புடலங்காயை எடுத்துக் கொள்வது முக்கியம்.
அதிலும் குறிப்பாக நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக புடலங்காய் அமைந்துள்ளது. புடலங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது இது வயிற்றில் எளிதாக செரிமானம் ஆகிவிடும். உடலில் உள்ள கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயத்திற்கு செல்கின்றார் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய தசைகளை சரியாக இயங்குவதை உறுதி செய்கின்றது .
உடலில் உள்ள கழிவுகள் மற்றும் சிறுநீரக கற்கள் இயற்கையான முறையில் வெளியேற்றுகிறது. சிறுநீரகத்திற்கு தண்ணீர் சுரப்பதை மேம்படுத்துகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுகிறது.
புடலங்காயின் சாறு சிறுநீரகம் மற்றும் வயிற்றின் அன்றாட பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. புடலங்காயில் குறிப்பிட்ட அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல் வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை நீக்குகிறது. இதுதான் மலம் மிகும். தன்மை இயற்கை முறையில் குடல் இயக்கத்தை தூண்டுகிறது இதனால் குடலில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் புடலங்காய் பார்த்துக் கொள்கிறது.
புடலங்காய் உடலில் உள்ள உலர்ந்த சளியை நீக்கும் தன்மையை கொண்டது. சளி உருவாகும் போது அதை சுவாச பாதையில் இருந்து நீக்கம் செய்கின்றது. நுரையீரல் இயக்கத்துக்கு மிகவும் நன்மை செய்கின்றது. தோளில் உள்ள அலர்ஜியை தடுக்கிறது ஆஸ்துமா உள்ளிட்டா சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றது.
புடலங்காய் நரம்பியல் மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் குணங்களைக் கொண்டது. இந்த காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் படபடப்பு, பயம், பதற்றம் மன அழுத்தம் ஆகியவை அனைத்தும் நீங்கும். இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.