
உலக சுகாதார அமைப்பானது, புதிய பாக்டீரியா எதிர்ப்புச் சிகிச்சையின் மேம்பாட்டினை ஊக்குவித்தல் 2023 என்ற புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் (AMR) பிரச்சினையினை நிவர்த்தி செய்வது நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையினை இது எடுத்துரைக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்புச் சிகிச்சையின் வலுவான செயல்முறையை உறுதி செய்வதில் உள்ள இடைவெளிகளையும் இது அடையாளம் காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான சுமார் 5 மில்லியன் உயிரிழப்புகளுக்கு இதுவே காரணமாக இருந்தது. இது 2050 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.