• September 24, 2023

புர்கா போடாததால் பள்ளி மாணவியை விட்டுச் சென்ற பேருந்து…கர்நாடகாவில் சர்ச்சை..!! 

புர்கா போடாததால் பள்ளி மாணவியை விட்டுச் சென்ற பேருந்து…கர்நாடகாவில் சர்ச்சை..!! 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்புர்கி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்ற பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஏறினார்கள். அப்போது ஒரு இஸ்லாமிய மாணவியை மட்டும் பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. அந்த மாணவி ஏன் தன்னை ஏற்றவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு நடத்துனர் நீ இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண் தானே புர்கா அணிந்து விட்டு பஸ்ஸில் ஏறினால் ஏறு இல்லை என்றால் ஏறாதே என மரியாதை இல்லாமல் பேசி உள்ளார். இச்சம்பவம் அந்த மாணவிக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த மாணவி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி முதலில் மாணவியிடம் நடத்துனர் பெயரை கேட்டுள்ளார். அதன் பின் நீ முஸ்லிமா என்று கேட்டதற்கு மாணவி ஆம் என்று கூறியுள்ளார். அதற்கு நடத்துனர் முதலில் புர்கா போடு அப்புறமா பேருந்தில் ஏறு என்று சொல்லிவிட்டு அந்த மாணவியை ஏற்றாமல் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Read Previous

38 வயது பெண்ணை தூக்கி சென்று கைதி அறையில் பலாத்காரம் செய்த அதிகாரிகள்..!! அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியானது..!!

Read Next

Flipkart நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular