சீனாவில் ‘லி’ என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவுவதற்காக, ஃபாங் என்ற நபர் 50,000 கிலோ சக்கரவள்ளி கிழங்குகளை தானமாக அளித்துள்ளார். கணவர் ஜியா, லியின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தன்னிடம் உள்ள அனைத்தையும் விற்றதை அறிந்த ஃபாங், ஏழை விவசாயி ஒருவரிடம் கிழங்குகளை கொள்முதல் செய்துள்ளார். அதனை ஜியாவுக்கு அனுப்பியுள்ளார். தற்போது அதனை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் ஜியா தனது மனைவியை பராமரித்து வருகிறார்.




