
புற்று நோய்க்கு மருந்து காய்ச்சலுக்கு தீர்வு பாம்பு போன்ற விஷக் கடிக்கும் சிறந்த மருந்தாக பயன்படும் மூலிகைகளில் ஒன்று நிலவேம்பு இந்த நிலவேம்பு குறித்து டாக்டர் சிவகார்த்திகேயன் கூறுவது….
நம் வீடுகளில் சாதாரணமாக பொருட்களோடு ஒன்றாக வளரும் மூலிகைகளில் கூட அவ்வளவு நன்மைகள் உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம் அப்படி நம் வீடுகளில் இருக்கும் நிலவேம்பில் எவ்வளவு பயன்கள் உண்டு என்று தெரியுமா நிலவேம்பின் யாரும் அறியாத மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்..
நிலவேம்பு : இதன் இலையும் தண்டும் நல்ல கசப்பு தன்மை உடையது ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகளில் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படும் இதை மருத்துவத்தில் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. இதுல கசாயமாக எடுத்துக் கொள்ளலாம் டெங்கு நோய்க்கு இன்றும் கசாயமாக விநியோக செய்யப்படுகிறது இந்த நிலவேம்பு புற்று நோய்க்கு நல்ல மருந்து பாம்பு கடி தேள் கடி போன்ற விஷக்கடிகளுக்கும் நல்லது. இதனை இன்றும் கிராமப்புறங்களில் விஷக்கடி மருந்துகளில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது மேலும் தோல் அலர்ஜிக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு பயன்படுகிறது…
புற்றுநோய் : உயிரையே பறிக்கிற அளவுக்கு கொடுமையான நோய்கள் சிலவற்றை கூட நிலவேம்பால் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் கூறுகிறார்கள் நிலவேம்பு புற்றுநோயை எதிர்த்து போராடவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது..
சர்க்கரை நோய் ; ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உதவுகிறது இதனால் சர்க்கரை உள்ளவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்..
விஷக்கடி : விஷக்கடிக்கு நிறைய மருந்துகள் இருந்தாலும் இன்றும் சித்த மருத்துவத்தில் நிலவேம்பு ஒரு முக்கிய மருந்தாக பயன்படுகிறது இதனை வாயில் வைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றால் கூட விஷ ஜந்துக்கள் கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று கூறப்படுகிறது..
கசாயம் செய்முறை : வீட்டில் எளிமையான முறையில் நிலவேம்பு கசாயத்தை செய்ய முடியும் இதற்கு முதலில் பத்து கிராம் நிலவேம்பு கஷாயக்கூடிய எடுத்து க்கொண்டு அதை 240 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பிறகு அதை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மில்லி அளவில் குடித்து வந்தால் உடலில் ஏற்படக்கூடிய விஷக்கடி தோல் அலர்ஜி அனைத்தும் சரியாகிவிடும்..!!