புழல் சிறையில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் 1.47 கிலோ மெத்தபட்டமைன் கடத்தல் அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்..!!

சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே காசி லிங்கம் என்கின்ற கைதி ஒருவர் தன் மனைவியிடம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் என்கின்ற போதை பொருளை கடத்தி உள்ளதாக வெளிவரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இந்த விடியா திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில் சிறையில் இருக்கும் ஒரு கைதி செல்போன் மூலம் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சகட்டம் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக அணியை சார்ந்த ஜாபர் ஜாதிக் சர்வதேச போதை பொருள் மாஃப்யா  நடத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு போதை பொருள் மாஃப்யா   அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதை பொருள்களில் கடத்தலின் முக்கிய மையமாக மாறி இருப்பது வேதனையாக  உள்ளது. எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம். தமிழகத்தில் எங்கும் போதை பொருள் கடத்தல் அமைப்புகளை முற்றுமாக ஒழிக்க வேண்டும் இல்லையென்றால் போதை பொருள் புலக்கத்திற்கு பொறுப்பேற்று இந்த லிடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் .கடைசி துளி  போதை பொருள் ஒளியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்”, என இ பி எஸ் கூறி உள்ளார்.

Read Previous

தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Read Next

அரசு பேருந்தில் பயணம் செய்ய மறுப்பு தூய்மை பணியாளர்களின் அதிரடி நடவடிக்கை..!! இரண்டு பேர் பணியிட மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular