
பெண்கள் கண்டிப்பாக பணவரவை அதிகரிக்கவும் கையில் காசு வருவதற்கும் இந்த ரகசிய ஆன்மீக குறிப்பை தெரிந்து கொண்டால் போதும். அது என்னவென்றால் தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும். தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு பச்சைக் கற்பூரம் சிறிதளவு எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் அந்த வாசம் அந்த குங்குமத்திலேயே நிலைத்திருக்கும். அது மட்டும் இன்றி அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம். இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் பயன்படுத்தி பாருங்கள். அதாவது தொடர்ந்து இந்த பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை 48 நாட்கள் நெற்றியில் வைத்து வர கையில் காசு வருவதை நன்றாக நாம் கண்கூட பார்க்க முடியும்.