இந்த நவீன காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் ஓடி ஓடி வேலை செய்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நம் கையில் சேராமல் பல வழிகளில் சென்று விடும் அது எதனால் என்று ஆண்களுக்கு குழப்பம் இருக்கிறதா இல்லையோ பெண்களுக்கு அதிகப்படியான குழப்பம் இருக்கும். இதனால், பெண்கள் இதை எல்லாம் கடைப்பிடித்தால் உங்கள் வீட்டில் செல்வம் சேரும். வீட்டில் நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் செல்வம் சேர்வதற்கு தடையாக அமைகிறது. நான் வீட்டில் செய்யும் தவறுகளை திருத்தினாலே நம் வீட்டில் செல்வம் செழிக்கும். அது என்னன்னா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
ஆன்மீக சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் செல்வம் தங்க அந்த வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் ஒட்டடை மற்றும் கிழிந்த துணிகள் போன்றவை இருக்கக் கூடாது. வீட்டின் பூஜை அறையில் பூஜை நடக்கும் போதும் சரி சாதாரணமாக விளக்கேற்றும் போதும் சரி பெண்கள்தான் ஏற்ற வேண்டும் ஆண்கள் ஏற்றக்கூடாது அவ்வாறு ஏற்றினால் அந்த வீட்டில் செல்வம் தங்காது. மேலும் வீட்டை சுத்தமாக வைக்கும் பொழுது வீட்டை சுற்றிலும் நாம் சுத்தமாக வைக்க வேண்டும் கரையான் போன்றவைகள் இருந்தால் நம் வீட்டில் முற்றிலுமாக செல்வம் தங்காது இதனால் இதில் எல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், மங்களகரமான பொருட்களை எல்லாம் இல்லை வேண்டாம் என்று சொல்லக்கூடாது. குறிப்பாக அன்னபூரணியாக இருக்கும் சமையல் அறையில் எதுவும் தீர்ந்து விடாமல் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் குறிப்பாக உப்பு, அரிசி சர்க்கரை போன்ற பொருட்களை தீரும் வரை வாங்காமல் வைக்கக்கூடாது. தீரும் முன்னரே அதை வாங்கி இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம் வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சம் பெற்று வீடு செல்வம் செழிக்கும். மேலே சொன்னவாறு இதை எல்லாமே பெண்கள் கண்டிப்பாக பாலோ செய்தாலே நம் வீட்டில் செல்வம் மற்றும் பணவரவு அதிகரிக்கும்.




