எல்லா ஆண்களும் தங்களது மனைவியை பாசத்துடன் தான் நடத்தவே விரும்புவார்கள்.
ஆனால்
அதே பாசத்தை அவர்களால் எப்போதும் காட்ட இயலாது
ஏனெனில்
ஒவ்வொரு ஆணுக்கும் குடும்பச்சுமை, பணப்பிரச்சினை,சகோதரிகள் திருமணம்,பெற்றோர், வேலையிடத்தில் பிரச்சினை,கடன் தொல்லை என ஏதாவது சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது.
அவனது பிரச்சினைகளை தன் மனைவியிடம் அவன் கூறும் போது சில பெண்கள் மட்டுமே தங்களது கணவர்களை புரிந்து கொள்கிறார்கள்,
அத்தகைய பெண்கள் தங்களது கணவருக்கு ஒரு மனைவியாக மட்டுமில்லாமல் சிறந்த தோழியாகவும் இருந்து சிக்கன வாழ்க்கை நடத்தி அவனை சிறந்த மனிதனாக்குகிறார்கள்.
மற்ற பெண்கள் தங்களது பெற்றோர் வீட்டில் இருந்த மாதிரி இங்கு இல்லையே என்று எண்ணி அவனை வெறுக்கத் துவங்குகிறார்கள்
அவனுக்கு சாப்பாடு கூட போடுவதில்லை,
அவனே எடுத்துவைத்து சாப்பிடும் நிலை பல வீடுகளில் உள்ளது.
அவனைப் பழிவாங்க அவனை அருகில் கூட நெருங்கவிடாத பெண்களும் உள்ளார்கள்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் தகராறு முற்றுகையில் அவனுக்கு நிம்மதி போய்விடுகிறது அவன் டாஸ்மாக்கில் நிம்மதி தேடவேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில ஆண்கள்
சரி அவளது விருப்பத்திற்கே நாம் சென்றுவிடுவோம் என்று மனைவியின் விருப்பப்படி சென்று கடனாளியாகில் நிற்கி இவள் நமக்கு சரிப்பட மாட்டாள் இதற்கு விவாகரத்தநீதிமன்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்..
மொத்தத்தில் புரிதலில் தான் பிரச்சினை இருக்கிறது.
இருவரும் ஆறஅமர உட்கார்ந்து பேசி தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்
ஆனால் பல பெண்கள் அதற்கு ஒத்துவருவதில்லை
இல்லை ஆண்கள் ஒத்துவருவதில்லை…நீயா..? நானா..? என வரும்போது அங்கே வாழ்க்கை கசக்கிறது.
இதனாலேயே!!!
பல ஆண்கள் திருமணத்திற்குப்பின் நிம்மதியின்றி அலைகிறார்கள்.




