
திருநெல்வேலியில் கடந்த 2022-ல் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரான மார்க்ரெட் தெரசாவை ஆறுமுகம் என்பவர் கத்தியால் குத்தினார். ஹெல்மெட் அணியாததற்கு வழக்குப்பதிவு செய்த ஆத்திரத்தில் இந்த செயலை அவர் செய்தார். சம்பவத்தில் மார்க்ரெட்டுக்கு கழுத்து, கை பகுதியில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திற்கு நீதிமன்றம் தற்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.