பெண் தீக்குளித்து தற்கொலை..!!

போடியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தேனி போடி வ. உ. சி. நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துமணி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் முத்துமணி கடந்த சில வாரங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். ஆனாலும் முத்துமணிக்கு வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்துமணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவர் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர், ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது, முத்துமணி பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து முத்துமணி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமணி இறந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Read Previous

உடல் நலக் குறைவால் ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு..!!

Read Next

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular