• September 24, 2023

பெண் தூக்கு போட்டு தற்கொலை..!!

சங்கராபுரம் அருகே உள்ள பொய்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் குழந்தை இல்லை. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் ஜெயந்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் ஜெயந்தி காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயந்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை இது குறித்து ஜெயந்தியின் உறவினர் மணிகண்டன் என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையில்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

மரத்தில் மோதி ஓம்னி கார், 3 பேர் காயம்…!!!

Read Next

சாராயம் பதுக்கிய வாலிபர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular