
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கல்லூரி மாணவிக்கு, அவரது கணவர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்தார். மாணவி ஓராண்டுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் சுப்ரீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து, அவருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதாக நினைத்திருந்த மாணவியின் பெற்றோருக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.