திருப்பத்தூர் மாவட்டத்தில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து, பெண் குழந்தை ஹரி வர்ஷினி உயிரிழந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




