பெரும் சோகம்..!! தொண்டையில் உணவு சிக்கி இளம்பெண் பலி..!! போலீசார் விசாரணை..!!
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். சங்கர கோமதி (22) என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தொண்டையில் உணவு சிக்கி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




