பொங்கல் பண்டிகையையொட்டி இன்று ஜனவரி 16-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது..!!

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது.

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று ஜனவரி 16-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இதற்காக ஜனவரி 3-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் 1000 ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி சர்க்கரை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக வழக்கமாக விடுமுறை விடப்படும் நாளான கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 13 பணி நாளாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக இன்று 13-ஆம் தேதி பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27-ஆம் தேதி மாற்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்து உள்ளது.

முன்னதாக ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள் 15,16ம் ஞாயிறு மற்றும் திங்கள் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்து இருந்தார். அத்தகைய சூழலில் ரேஷன் கடைகள் வரும் 16-ஆம் தேதி இயங்காது என்ற அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கவில்லை.

Read Previous

சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை குணப்படுத்தும் வெங்காயதாள்..!!

Read Next

நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular