
பொன்னாங்கன்னி கீரையை 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் 28-ம் நாள் நம் உடலில் நடக்கும் மாற்றம்.
நம் மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது பொன்னாங்கண்ணி கீரை. அதனால்தான் அதற்கு இந்த பெயர் வந்தது. மேலும் கீரைகளின் ராஜா இந்த கீரை. கண் புகைச்சல் உடல் சூடு ஆகிய பிரச்சினைகள் சரியாக இந்த பொன்னாங்கண்ணி தைலத்தை தலையில் தேய்க்கலாம் மேலும் புத்துணர்வும் கிடைக்கும். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன.
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு கால்சியம் பாஸ்பரஸ் புரதம் வைட்டமின்கள் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன.பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.இதை அடிக்கடி சமைத்து சாப்பிட பலவிதமான நோய்களில் இருந்து நாம் தப்பிக்கலாம். மேலும் இந்த கீரையின் நன்மைகளை பார்க்கலாம்.
- தற்போது உள்ள சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெருபாலானோர் மூக்கு கண்ணாடி அணிகின்றனர். இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து ௨௭ நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு வெகுவாக மேம்படும்.
- இரவு சரியாக தூங்காமல் இருப்பதாலும் செல்போன் கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை நீண்ட நேரம் பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும் என்று கூறப்படுகின்றது.