ஒரு வாட்ட சாட்டமான ஆள், தலையில் ஒரு மூட்டையோடு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அந்த வழியாக ஒரு மாட்டு வண்டி வந்தது.
மாட்டு வண்டிக்காரன் இந்த ஆளை பார்த்தான்.
ஏன் கஷ்டபடுகிறாய்?
வண்டி சும்மாதானே போகிறது.
ஏறி உட்கார்ந்து கொள் என்று சொன்னான்.
இவனும் ஏறி உட்கார்ந்தான்.
வண்டி போய்க்கொண்டிருந்தது.
கொஞ்ச தூரம் போனதும் வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான்.
இவன் அந்த மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்.
எதற்காக இன்னும் அந்த மூட்டையை தலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்.
வந்தவனும் வண்டிக்கு பாரம் எதற்கு அது என்னை மட்டும் சுமந்தால் போதும் மூட்டையை நான் சுமந்து கொள்கிறேன் என்று சொன்னான்.
இதற்கு என்ன அர்த்தம்.
இந்த ஆளுக்கு உடம்பு வளர்ந்து இருக்கிறதே தவிர அறிவு வளரவில்லை.
எமது வாழ்க்கையிலும் இந்த வண்டிக்காரன் போல் கடவுள் நமக்கும் பல வழிகளைக் காட்டுகிறார்.
வண்டியில் மூட்டையுடன் உட்கார்ந்திருப்பவர்கள் தான் நாம்
பொறாமை, கோபம் , வஞ்சகம் பழிவாங்கல், பணத்தாசை என்று பலவற்றை தலையில் சுமந்து கொண்டு திரிகிறோம்.
இந்த சுமைகளை எல்லாம் இறக்கி வைப்பதற்குரிய வழிகளையும் இறைவன் நமக்கு காட்டுகிறார்.
ஆலயவழிபாடு, தானதர்மங்கள் செய்தல் , பிறருக்கு உதவி செய்தல் என எத்தனையோ இதுபோன்ற மாட்டுவண்டிகள் நமது சுமைகளை இறக்கி வைப்பதற்காக இருந்தும் நாம்தான் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நமது அறியாமையால் இந்த மாட்டு வண்டியில் மூட்டையைச் சுமந்து கொண்டு உட்கார்ந்து இருப்பவனை போல் இந்த சுமைகளை காலம் பூராகவும் சுமந்துகொண்டு எம்மையும் கஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறோம்.




