சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை நேற்று (நவம்பர் 13) விக்னேஷ் என்ற இளைஞன் கத்தியால் குத்தினர். இதை கண்டித்து, இன்று (நவம்பர் 14) மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில்,ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால், இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆம்பூரில் மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




