
இந்தியா பாகிஸ்தானின் போர் பதற்றத்தால் இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலையங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விமான நிலையங்கள் செயல்படாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணத்தினால் பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் செல்லவிருந்த மக்கள் பிரச்சனைக்குள்ளாகிய நிலையில் மற்றொரு செய்தி இப்போது வந்துள்ளது.
அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், முனபாவ் என்னும் இரண்டு இடங்களில் இருக்கும் ரயில் நிலையங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ரயில் நிலையத்திற்கு வரவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் மாற்று பாதையில் செல்லப்பட்டும் காணப்படுகிறது. இதன் காரணத்தினால் அங்கிருக்கும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
இது மட்டும் இன்றி ஜம்மு அண்ட் காஷ்மீர் ராஜஸ்தான் பஞ்சாப் குஜராத் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளின் சேவையும் நிறுத்தப்பட்டிருக்கும் காரணத்தினால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.