போலியான ரேஷன் கார்டுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத குடும்பங்களின் 6 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கையால் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம். ஆனால், உணவுப் பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் ஆகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் கேஒய்சி சரிபார்ப்பை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செய்து கொள்வது அவசியம்.




