மகளிர் உரிமைத் தொகை: ஒரு முகாமில் 80 விண்ணப்பங்கள்..!!

சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாமில் ஒரு நாளைக்கு 60 முதல் 80 விண்ணப்பங்கள் பெறப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு முகாமுக்கும் வழிகாட்டும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மண்டல அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். அனைவருக்கும் விண்ணப்பம் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு உடனே வங்கிக் கணக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Read Previous

ஆதார் நிறுவனத்தில் வேலை ரெடி..!தேர்வு கிடையாது..! விண்ணப்பிக்க நாளை இறுதி தேதி..!!

Read Next

மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular