தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து உரிமை தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை தொடர்ந்து காஷ்மீர் மற்றும் ஹரியானாவிலும் மகளிர்களுக்கு மாதம் மாதம் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் 3 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.




