• September 24, 2023

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. தலைமையில் இன்று 24. 07. 2023 நடைபெற்றது. இதில்வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 309 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

 

Read Previous

சென்னைக்கு பள்ளி மாணவியை கடத்தி வந்த கல்லூரி மாணவர்…!!

Read Next

தமிழகத்தில் இருந்து கல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு; விழிபிதுங்கும் கேரளா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular