
மஞ்சள் காமாலை சரியாக 11 விதமான வைத்திய முறைகள்
1. கரிசலாங்கண்ணி இலை தும்பை இலை கீழாநெல்லி சம அளவு அரைத்து கொட்டைப்பாக்கு அளவு மோரில் காலை மாலை கொடுத்து வர தீரும்.
2. மூக்கிரட்டை வேர் 50 கிராம் மிளகு நாலு உத்தாமணி சாறு 50 மில்லி லிட்டர் ஆகியவற்றை 100 மில்லி லிட்டர் விளக்கெண்ணையில் காய்ச்சி வாரம் இரண்டு முறை கொடுக்க குழந்தைகளுக்கு காணும் காமாலை தீரும் ஆறு மாத குழந்தைக்கு 15 மில்லி தரும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு முப்பது மில்லி லிட்டரும் கொடுக்கலாம்.
3. மூக்கிரட்டை வேர் 30 கிராம் அருகம்புல் 30 கிராம் கீழாநெல்லி 30 கிராம் மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.
4. மூக்கிரட்டை இலையை பொரியல் துவையலாக வாரம் இரண்டு முறை சாப்பிட காமாலை தீரும்.
5. நெல்லி தைலம் வாரம் இரண்டு முறை மூலிகை வர தீரும்.
6. ஒரு பிடி அவுரி இலை இரண்டு சிட்டிகை சீரகம் ஆறு மிளகு ஆகியவற்றை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 60 மில்லி லிட்டர் வீதம் நான்கு வேளை கொடுக்க மஞ்சள் காமாலை தீரும்.
7. ஒரு தேக்கரண்டி வில்வ இலை சூரணத்துடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலை விரைவில் தீரும்.
8. மருதம்பட்டை சூரணத்துடன் மஞ்சள் கரிசலாங்கண்ணி சூரணம் சமன் கலந்து மூன்று விரல் அளவு காலை மாலை தேனில் கொள்ள பாமாலை தீரும்.
9. கீழாநெல்லி இலை கரிசலாங்கண்ணி இலை தும்ப இலை சமன் அரைத்து பெரியோர்க்கு புண்ணை காய் அளவும் இளைஞர்களுக்கு கலச்சிக்காய் அளவும் சிறுவர்களுக்கு சுண்டை காய் அளவும் பாலில் பத்து நாள் கொடுத்து வர காமாலை நீங்கும் காரம் புளி நீக்கி பால் மோர் சோறும் அரை உப்புமாக உணவு கொள்ள வேண்டும்.
10. நன்னாரி வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை தேனில் கொள்ள காமாலை தீரும் அதிகமாக சாப்பிட்டால் பசி இராது.
11. ஆமணக்கு இலையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நாலாம் நாள் வேதிக்கு கொடுக்க காமாலை தீரும்.