• September 24, 2023

மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி..?

மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்முறை

* தேங்காய்அரை கப்

* மணத்தக்காளி வற்றல்அரை கப்

* உப்புதேவைக்கேற்ப

* மஞ்சள் தூள்1 டீஸ்பூன்

* வெல்லம்3 டீஸ்பூன் (விரும்பினால்)

* காய்ந்த மிளகாய்6

* பெருங்காயம்1 சிட்டிகை

* தண்ணீர் தேவைக்கேற்ப

* மிளகாய்த் தூள்1 டேபிள் ஸ்புன்

தாளிக்க :
* நல்லெண்ணை – தேவைக்கேற்ப

* கடுகு – அரை டீஸ்பூன்

* உளுந்து – அரை டீஸ்பூன்

* வெந்தயம் – அரை டீஸ்பூன்

* கடலை பருப்பு – அரை டீஸ்பூன்

* சீரகம் – அரை டீஸ்பூன்

* கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை :
புளியை 2, 3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து, விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து, 2 டேபிள் ஸ்பு+ன் எண்ணையைச் சூடாக்கி, உளுந்து, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், சீரகத்தைத் தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் கரைத்துவைத்துள்ள புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
மற்றொரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணையில் மணத்தக்காளி வற்றலைச் சிவக்க வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.வதக்கிய கலவையை கொதிக்கவிடப்பட்டுள்ளள புளித் தண்ணீரில் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், மணத்தக்காளி வற்றல் குழம்பு ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த மணத்தக்காளி வற்றல் குழம்பை சாதம் மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

Read Previous

அதிகாரிகளின் அதிரடி சோதனை..!! சிக்கிய வெளிநாட்டு பணம்..!! உண்மையை உளறிய கடத்தல்காரர்கள்..!!

Read Next

முன்னாள் அமைச்சர் வீட்டில் மரண ஓலம்..!! பதறிப்போன ஈபிஎஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular