
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று செவ்வாய்க்கிழமை காவல் துறை சார்பில் தமிழ்நாடு தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை டிஎஸ்பி ராமநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மணப்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்ற ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.