
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பக்கம் கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொருபுறம் என்மார் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக அகதிகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவதாக மணிபூர் அரசு குற்றம் சாட்டி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மெயிடீஸ் பழங்குடியின மக்களுக்கும் மலைப்பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் குக்கி இன மக்களுக்கும் இடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இன கலவரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய இரண்டு குறிப்பிட்ட நாட்களில் மற்றும் மியான்மாரில் இருந்து 718 அகதிகள் இந்தியாவிற்குள் எந்தவித ஆவணமும் இன்றி அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக அசாம் ரைபிள் படையினரிடம் மணிப்பூர் அரசு விளக்கம் கேட்டு உள்ளது. அதாவது 31 குழந்தைகள் 208 பெண்கள் உட்பட 718 மியான்மார் நாட்டை சார்ந்தவர்கள் மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.